கள்ளக்குறிச்சி: 
ள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், உணவக உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தி, விதிகளை மீறிய உணவகங்களுக்கு அபராதமும்,  கெட்டுப் போன உணவக உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,  திருவண்ணாமலையைச் சேர்ந்த தாமோதரன், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள உணவகத்தில்   பரோட்டா சாப்பிட்டுள்ளார்.  பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று, தாமோதரன் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால்  உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.