சென்னை,

சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் உள்ள வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஏர்மேனாக பணியாற்றி வருகிறார் சபீர்சிங் என்ற வீரர். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சபீர்சிங்,  வழக்கம்போல நேற்றிரவு பணிக்குச் சென்றுள்ளார். ரோந்துப்பணியின்போது, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது அங்குள்ள விமானப்படை வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலைபளு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.

இதுகுறித்த தகவல் அறிந்து, சேலையூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சபீர்சிங் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.