ஈரோடு:
ஈரோடு மண்டல திமுக மாநாடு இரண்டு நாள் நிகழ்ச்சிகளாக நடக்க இருக்கிறது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) நடக்கிறது. முதல் நாள் காலை 9:00 மணிக்கு அரித்துவாரமங்கலம் பழனிவேல் நாதஸ்வர நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்குகிறது.

காலை 10:00 மணிக்கு கோவி.செழியன் கொடியேற்றி பேசுகிறார். வரவேற்புக்குழு தலைவரும், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான முத்துசாமி காலை 10:30 மணிக்கு வரவேற்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பேசுகின்றனர்.
முதல் நாள் (நாளை) மதியம் 3:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, 4:00 மணிக்கு . திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் உட்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகளின் பேச்சு இடம்பெறும் 2-ம் நாள் நிகழ்ச்சிகள் காலை 9:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கும். காலை 10:00 மணி முதல் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள்.

12:30 மணிக்கு திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம். . மதியம் 3:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு மாநாட்டு தீர்மானம் வாசித்தல், மாலை 6:00 மணிக்கு மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 2-ம் நாள் இரவு 8:00 மணிக்கு பேசுகிறார். இரவு 8:30 மணிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.
இரு நாட்களிலும் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ரகுமான்கான் என முக்கிய நிர்வாகிகள் பேசுகின்றனர். ஈரோடு மண்டல திமுக மாநாடு நடைபெறும் பெருந்துறை பகுதி முழுதும் விழாக் கோலம் பூண்டிருக்கிறது. மண்டல மாநாடு என்றாலும், மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்றே வந்திருக்கிறார்கள்.
அவர்கள் தங்குவதற்கு தனித்தனியாக திருமண மண்டபங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டையொட்டி திராவிட இயக்க வரலாற்று கண்காட்சியை இரு தினங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த கண்காட்சியை காண, தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் திரளாக வந்து கொண்டிருக்கிறார்கள்.