
சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதி மன்றம்.
நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வந்த சுப்பிரமணியன்சுவாமி, ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க வேண்டும் என்று கவர்னரை சந்தித்து வற்புறுத்தினார்.
இந்நிலையில் இன்று உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன்சுவாமி, தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என்று கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel