சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை, இதில் ஏற்பட்டுள்ள எரி ஏய்ப்பு குறித்து ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு கடிதம் எழுதி உள்ளது.  இதனால் மணல் குவாரி விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மணல், கல் உள்பட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் இருந்தாலும், ஆட்சியாளர்கள் மற்றும் கட்சியினரின் தலைமையில் மணல் உள்பட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

ஆறு, குளங்களில் அளவுக்கு அதிகமான மணல் அள்ளுவதால், நீர் நிலைகள் நீராதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்த வருகிறது. இந்த நிலையில்,  மணல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்டு  அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் முறைகேடுகள் குறித்தும், அதன்மூலம் சட்டவிரோத பணி மாற்றம் நடைபெற்று வருவது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை ரெய்டு நடத்தியது, விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், மணல் குவாரிகளில் நடைபெற்று வந்த வரி ஏய்ப்பை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறைக்கும் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

மிழகம் முழுவதும் 2023ம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி பல இடங்களில் செயல்பட்டு வரும்  மணல் குவாரிகளில், மணல் விற்பனை செய்யும் இடங்களில், அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் நபர்கள் உட்பட பல இடங்களில் அமலாக்க இயக்குனரகம் (இ.டி) சோதனை நடத்தியது.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி வரி இழப்புகளை பரிந்துரைத்து, போலியான மணல் விற்பனை ரசீதுகள் மற்றும் போலி க்யூ.ஆர் குறியீடுகள் உள்ளிட்ட குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்களை பறிமுதல் செய்தது.

இதைத்தொடர்ந்து மணல்குவாரி முறைகேட்டின் . ஒரு பகுதியாக, விசாரணை அதிகாரிகள் ஐ.ஐ.டி – கான்பூரின் நிபுணத்துவத்துடன் அனைத்து மணல் குவாரி இடங்களிலும்  டிரோன்கள், ஒளி கண்டறிதல் மற்றும் ரேங்கிங் (LiDAR) கணக்கெடுப்பு, பாத்திமெட்ரிக் பகுப்பாய்வு மற்றும் செயற்கைக்கோள் பட செயலாக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழில்நுட்ப ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது, மணல் குவாரி தோண்டும் இடங்களிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் அதிகளவு தோண்டப்படுவதாக நடப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மணல் அகழ்வின் உண்மையான விலை ரூ. 4,730 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், கணக்குப் புத்தகத்தில் காட்டப்பட்டுள்ள வருவாய் ரூ. 36.45 கோடி மட்டுமே என ஏஜென்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக 8 மாவட்ட ஆட்சியர்களும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்திலின் பேரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்த னர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறைமேல் நடவடிக்கையாக  அமலாக்க இயக்குனரகம் வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய இரண்டிற்கும் கடிதம் எழுதி உள்ளத. அந்த  கடிதத்தில்,  மணல் குவாரிகளில், மணல் அள்ளும் பெரிய இயந்திர  உற்பத்தியாளர்களான  எம். கோபெல்கோ கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் இந்தியா (பி) லிமிடெட் மற்றும் எம்/எஸ். ஜே.சி.பி இந்தியா லிமிடெட் நிறுவனம், தமிழகத்தில் உள்ள 16 வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 273 மணல் அள்ளும் இயந்திரங்களை வழங்கியது தெரியவந்தது.

ஜி.பி.எஸ் இருப்பிட ஒருங்கிணைப்புகள் மற்றும் பிற தரவுகளின் அடிப்படையில், இந்த அகழ்வாராய்ச்சிகள் 28 இடங்களில் மணல் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்டன  என்பதையும் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஒவ்வொரு மணல் அள்ளும் இயந்திரங்களைப் பொறுத்தமட்டில் வேலை நேரம் மற்றும் செயலற்ற நேரம் பற்றிய தரவுகளின் விவரங்களையும், தோராயமாக தோண்டப்பட்ட மொத்த மணலின் அளவையும் அவர்கள் அளித்துள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது நடக்கிறது என்பது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.யின் உட்கூறுகளின் மொத்தக் குறைவான அறிக்கையைத் தவிர, ஒப்பந்ததாரர்கள் மற்றும் மணல் அள்ளும் இயந்திரங்களின் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் கிடைத்த மொத்த வருவாயையும் மறைத்து, கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

மணல் குவாரி முறைகேடு: அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

கனிம வளக்கொள்ளை: மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் வீடு உள்பட பல இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.

மணல் குவாரி மோசடி: ஒப்பந்ததாரர்களின் ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை