சென்னை: நாடு முழுவதும் ஆண்டுக்கொரு முறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில், சென்னை புறநகரில் உள்ள 5 உள்பட 29 சுங்கச்சாவடிகளில் மார்ச் 31-ம் தேதி முதல்  சுங்கக்கட்டணம் உயர்கிறது.

நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், அதை பராமரிக்க சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,  நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் 48 தேசிய சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவிகிதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மார்ச் 31ந்தேதி முதல் தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை புறநகர்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளும் அடங்கும்.  இதை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.