சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் 37 பேர் பதவி உயர்வு பெற்று கிரேடு-2 முதல்வர்களாக நியமிக்கப்படுவதாக  தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் (Government arts and science colleges) உதவிப் பேராசிரியர்களாகப் (associate professors) பணியாற்றி வந்த 37 பேர் பதவி உயர்வு பெற்று பல்வேறு கல்லூரிகளில் கிரேடு-2 முதல்வர்களாக நியமனம் செய்யப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித் துறைச் செயலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் உதவிப் பேராசிரியர்கள் 37 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, முதல்வர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். அதனப்டி,  வேலூர் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வராக வாசுதேவன், அரியலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக கலைச்செல்வி, ஆலங்குளம் கல்லூரிக்கு பாத்திமா, ஓசூர்- ஸ்ரீதரன், கூடலூர் – ராஜேந்திரன், ராமேஸ்வரம் அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரவிந்திரன் உள்பட 37 பேர் முதல்வர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.