Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு கேட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் உள்பட 4.52 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களுக்கு மின்சார வாரியம் விரைவில் கடிதம் அனுப்பும். கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் பதிவு செய்தவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
முதல்கட்டமாக 2022மார்ச் மாதத்திற்குள், அதாவது அடுத்த 6 மாதத்திற்குள் விண்ணப்பித்துள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுடன், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்த பின்னர் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.
மேலும், தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 16,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது 40% மின்சாரம் தனியாரிடம் இருந்து அரசு கொள்முதல் செய்கிறது. நிலக்கரி மாயம் தொடர்பான விசாரணை குழு இறுதி அறிக்கையின் ஆய்வில் உள்ளது. அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை முதலமைச்சரின் ஆலோசனைப்படி எடுக்கப்படும் என தெரிவித்தார்.