சென்னை:
கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள், மழை நீரில் நனைந்து, முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் கொள்முதல் நிலையம் பற்றி தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், விளைபொருள் வீணாவதை தடுக்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் வீணாவதாக தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.