சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என விருத்தாசலத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் மக்களை சந்தித்து வரும் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின்  3 ஆம் கட்ட சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று தனது சுற்றுப்பயணத்தை கடலூர் மாவட்டத்தில் தொடங்கிய நிலையில், இன்றும் 2வது நாளாக கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு உள்ளார்.

இன்று காலை கடலூர் மேற்கு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் ஸ்டாலின் , காலையில் அங்குள்ள கலைஞர் திடல்,  பெரியார் நகர், விருத்தாசலம் நெடுஞ்சாலை போன்ற பகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறார்.
விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற, உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு – குறைகளைக் கேட்டறிந்தார்’ அதைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றும்,  “கலைஞரின் மகனான இந்த ஸ்டாலின் சொன்னதைச் செய்வான் – செய்வதைத்தான் சொல்வான்; நாளைய தமிழகம் நல்ல தமிழகமாக அமையும் என்று கூறினார்.