சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தண்டனையை அதிகரிக்கும் வகையிலான மசோதா போன்றவை இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடரும், எடப்பாடி அரசின் கடைசி கூட்டத்தொடருமான, நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகறிது. ஏற்கனவே 2ந்தேதி  ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மறைந்த 25 எம்எல்ஏக்கள். அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி. ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து, ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது. விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தண்டனையை அதிகரிக்கும் வகையிலான மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.