சென்னை: சென்னையில், இன்று ஒரே நாளில் கொரோனா 24 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று கூறலாம். அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஆகையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107,109 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 1103 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.
இதுவரை 93,231 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். 11,606 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 24 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel