சென்னை: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற தனித் தேர்வுகளுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை வெளியிடப்படுகிறது.

தேர்வு எழுதிய தனி தேர்வர்கள் நாளை பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்ற icon click செய்து  அதில் DGE RESULT என்று தோன்றும், அதை கிளிக் செய்தவுடன் ESLC Examination oct 2022 – private candidates – view result- யை click செய்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.