சென்னை: 
மிழகத்தில்  1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது?  என்ற கேள்விக்கு  அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர்,  செப்டம்பர் 8-க்கு பிறகு முதல்வருடன் ஆலோசித்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது  குறித்து  முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.