81.5 கோடி இந்தியர்களின் ஆதார் எண், பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க இனைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் டார்க் வெப் என்ப்படும் தரவு திருட்டு வலைதளத்தில் கிடைப்பதாக வந்த தகவலையடுத்து அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இதுதெரியவந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஐசிஎம்ஆர் சர்வர்களில் இருந்து திருடப்பட்டுள்ள இந்த தரவுகளில் அவர்களின் நோய் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட விவரங்கள் உள்ளது.

இது இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தரவு திருட்டு என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து தரவு திருட்டு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.