பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா ஜோடியாக நடிக்கும் புதிய தெலுங்கு படம் “புஷ்பா”.

சுகுமாறன் இயக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

செம்மரக்கடத்தல் காரர்களை கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் மரம் கடத்தும் லாரி, டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.

 

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே மெரதுமில்லி வனப்பகுதியில் நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் குறையாததால், படப்பிடிப்பில் சொற்ப ஆட்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அடர்ந்த காட்டில் நடக்கும் “புஷ்பா” ஷுட்டிங்கில் தினமும் 800 பேர் கலந்து கொண்டு நடித்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழுவினரின் வாகனங்கள் அந்த பகுதியில் ஒரு கி.மீ. தூரத்துக்கு அணி வகுத்து நின்றுள்ளன.

படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தற்காலிகமாக ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த குழுவை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு இறந்து விட்டதாகவும், இதனால் இயக்குநர் சுகுமாறன் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தகவல்.

130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட இந்த படத்தின் பட்ஜெட் இப்போது 150 கோடியை தாண்டி உள்ளது.

அடர்ந்த காட்டில் ஷுட்டிங் நடந்த போது, சாப்பாடு உள்ளிட்ட இனங்களுக்காக தினமும் 40 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

– பா. பாரதி