சென்னை: தமிழ்நாட்டில்  8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு  பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ளார்.

சென்னை, தமிழக அரசுப் பணியில் 1992-ம் ஆண்டில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவி நிலையை உயர்த்தி தமிழகஅரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி,  அவர்கள் ஏற்கனவே முதன்மைச் செயலாளராக வகிக்கும் அதே துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்த்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,

  1. டாக்டர் ராதாகிருஷ்ணன்:  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கும் நிலையில்,  அதே துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.
  2. நீரஜ் மிட்டல்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார்.
  3. குமார் ஜெயந்த் மங்கத்ராம் சர்மா: பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார்.
  4. பிரதீப் யாதவ்: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.
  5. குமார் ஜெயந்த்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார்.
  6. கே.கோபால்: போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.
  7. ராஜேஷ் லக்கானி: தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் டான்ஜெட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவராக இருந்த நிலையில், தற்போதுகூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்வு பெறுகிறார்.
  8. ராஜேந்திரகுமார்: மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றும் ராஜேந்திரகுமாருக்கும் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்வு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.