சென்னை,

மிழக அரசு ஊழியர்களின்  7வது ஊதியக் குழு குறித்த இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க குழு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  பிப்ரவரி 22ந்தேதி அறிவித்தார்.

நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவினர் 7வது ஊதியக் குழு தொடர்பான இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று சமர்ப்பித்தனர்.

இதனை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம்  முதல்வரிடம் வழங்கினார்.