சென்னை

மிழ்நாடு இளைஞர் காங்கிரசில் 7.19 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹசன் மவுலானா சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த முறை இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் பொறுத்தவரை புது முயற்சியாக செல்போன் ஆப் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கையும் இதன் மூலமே நடைபெற்று வருகிறது.  அதன்படி புதிய உறுப்பினர்களாகச் சேருகிறவர்களும் ஆப் மூலம் மட்டுமே கட்சியில் இணைய முடியும்.  இவர்களும் நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் வகையில் வாக்களிக்கலாம். இவ்வாறு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. .

தமிழகத்தில் கடந்த மாதம் 8ம்தேதி முதல் வாக்குப்பதிவுடன் கூடிய உறுப்பினர் சேர்க்கை நடந்து நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பிரதேச தேர்தல் அதிகாரி ராஜு பி நாயர் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் 7.19 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.