சென்னை: தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, கூடுதல் தலைமைச்செயலாளர் பனிந்தரரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புனித தோமையர் மலை காவல் துணை ஆணையராக தீபக் சிவாச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப்பும், ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக சமாய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.