சென்னை

ன்று தமிழகத்தில் 6  ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 தமிழகத் தலைமைச் செயலர் தேவதாஸ் மீனா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிவிப்பின் மூலம் 6 ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு :

 * சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்.

* தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன் நியமனம்.

* தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்.

* மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்.

* சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம்.

* ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம்.