பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று ரிக்டர் அளவுகோலி 6.0 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகளில் தஞ்ச மடைந்தனர். பள்ளி மாணாக்கர்கள் பாதுகாப்பாக அதிர்ச்சியில் உறைந்தனர்.

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் 2 மணியளில்  திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் உள்ள மலை சார்ந்த தங்கச் சுரங்க மாகாணமான தாவோ டி ஓரோவில் உள்ள மரகுசன் நகராட்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்த  ஆழமற்ற நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். பள்ளி கல்லூரி மாணாக்கர்களும் அதிர்ச்சி அடைந்து உடனே பாதுகாப்பு தேடி வெறியேறினர். பள்ளி மைதானத்தில் தஞ்சமடைந்தனர்.

பொதுவாக, ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதால், சேதம் குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், இந்த நிலநடுக்கத்தால், தேசிய நெடுஞ்சாலையில் பிளவு மற்றும் நிலச்சரிவு ஏழுற்பட்டு இருப்பதாக தகவல்கள்கள் தெரிவிக்கின்றன.