தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 253, செங்கல்பட்டில் 129, திருவள்ளூரில் 30 மற்றும் காஞ்சிபுரத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 32, கன்னியாகுமரியில் 14, திருநெல்வேலியில் 8, நீலகிரியில் 6, ராணிப்பேட்டை மற்றும் தஞ்சாவூரில் தலா 5 பேருக்கும்,

கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் சேலத்தில் தலா 4 பேருக்கும், ஈரோடு, தூத்துக்குடி, மற்றும் சிவகங்கையில் தலா 3 பேருக்கும்,

கடலூர், மயிலாடுதுறை, தென்காசி, திருச்சி மற்றும் வேலூரில் 2 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர், கரூர், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இன்று மொத்தம் 15,233 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 301 ஆண்கள் 251 பெண்கள் என மொத்தம் 552 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

177 பேர் இன்று குணமடைந்த நிலையில் 2313 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.