டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில், புதிதாக 12,847 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள கொரோனா தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று முழுவதும் நேற்று ஒரே நாளல் புதிதாக மேலும் 12,847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,70,577 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 14 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,817 ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் 7,985 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,82,697 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  63,063பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 1,95,84,03,471  கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,27,365 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.