திருச்செந்தூர்

திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சியில் 6 வார்டுகளில் போட்டியிட்டு வென்று பதவி ஏற்ற 6 பேரில் 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 6 வார்டு உறுப்பினர்கள் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் ; 1 மற்றும் 4 வது வார்டுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி 2,3,5,6 ஆகிய நான்கு வார்டு உறுப்பினர்களுக்கான பதவிக்கு நடந்த தேர்தலில் 8 பேர் போட்டியிட்டனர் இங்குள்ள 566 வாக்காளர்களில், 282 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

பிறகு நடந்த வாக்கு எண்ணிக்கையில் பிச்சிவிளை பகுதியில் 1 வது வார்டுக்கு வைகுண்ட செல்வியும், 4 வது வார்டுக்கு சுஜாதாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிச்சிவிளை சாமுவேல் நகர் 2வது வார்டுக்கு கேசவன், வடக்கு தெரு 3 வது வார்டு பதவிக்கு நடராஜன் காமராஜர் தெரு 5 வது வார்டுக்கு யாக்கோப் புது கிணறு 6 வது வார்டு பதவிக்கு பரிமள செல்வி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கடந்த 19ஆம் தேதி பிச்சி விளையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு 6 வது வார்டில் வெற்றி பெற்ற பரிமள செல்வி வரவில்லை. மீதமுள்ள 5 வார்டுகள் உறுப்பினர் பதவியேற்றனர். இன்று உறுப்பினர்களாகப் பதவியேற்ற ஐந்து பேரும் று திடீரென ராஜினாமா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பரிமள செல்வி என்பவர் பதிவு ஏற்கவும் இல்லை ராஜினாமா செய்யவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.