சென்னை: தமிழகத்தில் எழுந்துள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், இன்று  மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரம் அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பல முகாம்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என நேரிலும், கடிதத்திலும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 5 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசி வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவில உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து இன்று மதியம்  தடுப்பூசிகள் சென்னைக்கு வர உள்ளதாகவும் அதன்பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்