சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்  செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை புளியந்தோப்பு காவல்நிலைய துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல் பயிற்சி கல்லுரி முதல்வராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்

செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் நியமிக்கப்பட்டு உள்ளார்.