சென்னை

கடற்கரை – தாம்பரம் செல்லும் 5 மின்சார ரயில்கள் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காகச் சென்னை கடற்கரையில் இருந்து இரவு செல்லும் 5 மின்சார ரயில்கள் முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்படவுள்ளது.

தென்னக ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”நாளை முதல் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும். 

மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்குப் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.