சென்னை:

மிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்த உள்ளது. இதுவரை 48 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் 2009ம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் பரவியது.  அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு ஏராளமானனோர் பலியான நிலையில், மத்திய மாநில அரசுகள் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.  கடந்த ஆண்டை போன்று, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கிவிட்டது.

ஜனவரி 1ந்தேதி முதல் 13ம் தேதி  வரை தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 48 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.