சென்னை:

றுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரம் நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெ.மரணம் தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யிலான விசாரணை ஆணையத்திற்கு  தடை விதிக்க கோரி அப்போலோ நிர்வாகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில்  தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் வழக்கில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க மேலும் 4 வார கால அவகாசம் கோரப்பட்டது.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று,  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.