சென்னை

மிழகக் காவல்துறை சென்னையில்  4 இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்கலாம் என அறிவித்துள்ளது.

மொத்தம் சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் இந்த விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது  தமிழக காவல்துறை சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகக் காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.