உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழக காவல்துறை தலைமையக ஏடிஜிபி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

தற்போது இந்த பொறுப்பை பால நாகதேவி, ஐ.பி.எஸ். கூடுதலாக கவனித்து வந்தார்.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டதை அடுத்து அவர் கவனித்து வந்த உளவுத்துறையின் முழு பொறுப்பையும் உளவுத்துறை ஐ.ஜி. டாக்டர் கே.ஏ. செந்தில் வேலனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தவிர, ஆவடி காவல் சரக ஆணையராக உள்ள ஏடிஜிபி ஏ. அருண், ஐ.பி.எஸ். சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்த பொறுப்பை வகித்து வரும் ஏடிஜிபி கே. சங்கர், ஐ.பி.எஸ். ஆவடி காவல் சரக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசின் முதன்மை செயலாளர் பி. அமுதா, ஐ.ஏ.எஸ். இன்று வெளியிட்டுள்ளார்.