விலைவாசி உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களவை சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் நால்வர் இடைநீக்கம்

அவையின் மையப்பகுதியில் கூடி முழக்கங்கள் எழுப்பிய ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ், டி.என்.பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள் அவை நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று அந்த உத்தரவில் கூறியுள்ளார்.