கோயமுத்தூர்: கோவையில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கொடிசியா மாநாட்டில் நடைபெறும் முதலீட்டாளர்கள மாநாட்டில் கலந்துகொள்கிறார். திமுக ஆட்சி வந்தபிறகு நடைபெறும் 3வது முதலீட்டாளர்கள் மாநாடு என்பது சிறப்பு மிக்கதாகும்.

2நாள் பயணமாக கோவை சென்ற முதல்வர் நேற்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று, மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினா. அத்துடன்  நிறைவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இதையடுத்து இன்று கோவையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.  இன்று காலை 10:30 மணி அளவில் கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்வர், கொடிசியா முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-வது கட்டமாக கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.