சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள  234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் கடந்த  12ம் தேதி தொடங்கி 19ம் தேதி நிறைவடைந்தது. இதில் 7,000கும் மேற்பட்ட வேட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மார்ச் 20ம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற.து  தொடர்ந்து 22ம் தேதி  மாற்று வேட்பாளர்கள் மற்றும் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கியவர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, தேர்தலில் போட்டியிட மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7,255 மனுக்களில் 4,442 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த தேர்தலில் ஆண் வேட்பாளர்கள் 3,585 பேர், பெண் வேட்பாளர்கள் 411, மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கரூர் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சென்னை ஆர்.கே.நகரில் 31 பேரும், சைதாப்பேட்டையில் 30 பேரும் போட்டியிட உள்ளனர்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 207 பேர் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.