கோவை:
கோவை மாவட்டம் தூடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி 39 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் தூடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர்களுக்கு 61 வயதான முதியவர் ஒருவர் உணவு சப்ளை செய்து வந்தார். இந்நிலையில் அந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக அந்நபருடன் தொடர்பில் இருந்த, 72 பேரின் சளி மாதிரிகள், துடியலுார் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக, 32 பேருக்கான ஆய்வு முடிவுகளில், அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை என, தெரியவந்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் கூறுகையில், ”போலீசார் உட்பட, 40 பேருக்கான ஆய்வு முடிவுகள் ஒரிரு நாளில் வெளியாகும்,” என்றார்.