தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 21, செங்கல்பட்டில் 5 மற்றும் கடலூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை, மதுரை, புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பிரிட்டனில் இருந்து வந்த தலா ஒரு பயணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 15,850 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 22 ஆண்கள் 13 பெண்கள் என மொத்தம் 35 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

51 பேர் இன்று குணமடைந்த நிலையில் 408 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.