உதகை: 31வது நினைவு தினத்தையொட்டி ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

3 நாள் சுற்றுப்பயணம் ஊட்டியில் முகாமிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நேற்று மலர் கண்காட்சியை திறந்து வைத்ததுடன், மனைவி துர்காவுடன் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, உதகையில் அவரது சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த  ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.