சென்னை : கொரோனா காலக்கட்டமான 2020-21ம் நிதி ஆண்டில், 3101 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப். சாதனை படைத்துள்ளது.

கொரோனா தொற்று பதவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் பல தொழில்கள் முடங்கின. இந்த நிலையில், சென்னையில் உள்ள ஐசிஎப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலை நடப்பு நிதியாண்டில் (2021/22) மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.

கொரோனா ஊரடங்காலும் ரயில் பெட்டி தயாரிப்பு தளவாடங்கள் இயந்திரங்கள் உதிரிப்பாகங்கள் தட்டுப்பாட்டாலும் 2019 – 2020ல் 4238 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  4166 பெட்டிகளே தயாரிக்க முடிந்தது. இதேநிலை தொடர்ந்ததால் 2020 -2021ம் ஆண்டில் 1954 பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

இந்த நிலையில் 2021 – 2022ம் ஆண்டில் 3678 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தளவாட பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக,  3100 பெட்டிகள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

இதையடுத்து, ஐசிஎஃப்பில் ரயில்பெட்டி, தயாரிப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டன. தற்போது நவீன தொழில் நுட்பமான  ‘லிங் ஹாப்மென் புஸ்’ என்கிற எல்.எச்.பி. பெட்டிகள் அதிகம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி நிர்ணயித்திருந்த இலக்கைவிட 1 பெட்டி கூடுதலாக 3101 பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப். சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியன் ரயில்வேக்கு, 2,639 எல்.எச்.பி., பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், 248 மெமூ ரயில் பெட்டிகள், மற்றும் 50 மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கும் பவர் கார் ரயில் பெட்டிகள், 18 ரயில் பாதை ஆய்வு ரயில் கார் பெட்டிகள், கொல்கத்தா மெட்ரோ ரயிலுக்கு 32 பெட்டிகள், இலங்கைக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் டெமூ 109 ரயில் பெட்டிகள்,   ‘ஸ்பிக்’ நிறுவனத்துக்கு ஐந்து பெட்டிகள் என, மொத்தம் இவ்வாண்டு, 3,101 பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.