சென்னை: பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகளை சிபிசிஐடி பதிவு செய்துள்ளது.

சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே 5 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை  கேளம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும்  சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து, அவர் மீது 5 போக்சோ வழக்குகள் பதவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே 5 போஸ்கோ வழக்குகள் உள்பட மொத்தம் ஆறு வழக்குகள் அவர் மீது இருக்கும் நிலையில் தற்போது மேலும் 3 போஸ்கோ வழக்குகள சிபிசிஐடி காவல்துறை பதிவு செய்து உள்ளத. இதன் மூலம்  சிவசங்கர் பாபாமீது  8 போக்சோ வழக்குகள் உள்பட மொத்தம் 9 வழக்குகள் உள்ளன. இந்த ஒன்பது வழக்குகளிலும் அவர் ஜாமீன் பெற்றால் மட்டுமே வெளியே வர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவசங்கர் பாபாவை நிரந்தரமாக ஜெயிலில் அடைக்கும் நோக்கத்திலேயே, காவல்துறை அடுத்தடுத்து தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.