** நமது தமிழக மீனவர்களுக்கு என்றைக்குமே பொழுது விடியாதோ..என்கிற ஏக்கம் நம் நெஞ்சில் எழுகிறது!

ஸ்ரீ லங்காவைத் தற்போது ஆளும் ராஜபக்சேக்களின் குடும்ப ஆட்சி மிகவும் வன்மத்துடன் நம் மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது! ஆனால்….இங்கிருக்கும் மோடி அரசோ எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது!

எப்போதும் போல் கடலில் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் நம் மீனவர்கள்!

*** நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத் தொடரில் நடந்த நிகழ்வுகளுக்காக தற்போதைய குளிர்காலக் கூட்டத் தொடரில் 12 எதிர்க்கட்சி எம். பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் அனலாக் கிளப்பி இருக்கிறது!

அத்துடன் லடாக்குக்கு மாநில அந்தஸ்து தரும் விவகாரம், லக்கிம்பூர் படுகொலை விவகாரம், நீட் தேர்வு பிரச்சனை போன்றவைகளால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன!

” எதிர்க்கட்சிகளை அழைத்துப் பேசும் கடமை உள்ள ஆளும் மோடி அரசு, எதிர்க்கட்சிகள் மீது பழி போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது..” என்று சாடுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.