திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலி.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1011, செங்கல்பட்டில் 408, திருவள்ளூரில் 184 மற்றும் காஞ்சிபுரத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 125, திருச்சி 93, திருநெல்வேலி 86, கன்னியாகுமரி 59, தூத்துக்குடி 49, விழுப்புரம் 43, ஈரோடு 42, சேலம் 41,

மதுரை 37, கடலூர்36, சிவகங்கை 33, ராணிப்பேட்டை 32, தேனி 31, நாமக்கல் 29, விருதுநகர் 27, தென்காசி 26, திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூரில் தலா 24 பேருக்கும்,

திருப்பூர் 23, கள்ளக்குறிச்சி 21, பெரம்பலூர் 19, புதுக்கோட்டை 18, திண்டுக்கல் 16, கிருஷ்ணகிரி மற்றும் வேலூரில் தலா 15 பேருக்கும்,

கரூர் மற்றும் திருவாரூரில் தலா 13 பேருக்கும், தருமபுரி 10,

நீலகிரி 8, ராமநாதபுரம் மற்றும் திருப்பத்தூரில் தலா 7 பேருக்கும், நாகப்பட்டினம் 6, மயிலாடுதுறை 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தவிர, பங்களாதேஷில் இருந்து வந்த 2 பேருக்கும், கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும், டெல்லி, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இன்று மொத்தம் 31,707 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 1,563 ஆண்கள் 1,202 பெண்கள் என மொத்தம் 2,765 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2,103 பேர் இன்று குணமடைந்த நிலையில் 18,378 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.