சென்னை: தமிழ்நாட்டில் நேற்று  1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ள நிலையில், சென்னையில் 190பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுரவரை 26,57,266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 35,490 பேர் உயிர் இழந்துள்ளனர். அதேவேளையில் இதுவரை 26,04,491  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 17,285 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று மேலும் 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,49,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே நேற்று உரிழந்துள்ளதால்,  இதுவரை 8,464 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். நேற்று  201 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,38,537 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,087 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

26.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 51,82,999 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 26.09.2021 அன்று 2,25,627 ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: