சென்னை:  சென்னையில் நாளை  (25.02.2023) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “சென்னையில் நாளை  (25.02.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி : மணலி சரவணா நகர், சக்தி நகர், பாஷ்யம் அடுக்கு மாடி, அம்மன் நகர், மீரா நகர், பஜனை கோவில் தெரு, ருக்குமணி நகர், முத்துகுமரன் நகர், நண்பர்கள் நகர், தேவதாஸ் நகர், மலையம்பாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி : அன்னை நகர் கண்டிகை, பெருமாள் கோவில் தெரு, மேட்டு காவியா நகர், லேக் வியூ கார்டன் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து பராமரிப்பு பணியின்போது மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.