சென்னை:
மிழகத்தில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், மாநில அரசு வரும் 4ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் புதியதாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி யாகி உள்ளது. தலைநகர் சென்னையில் அதிகப்பட்சமாக 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்து உள்ளது.
அதிகரித்துள்ள 231 கேஸ்களில்,  சென்னை – 174, காஞ்சிபுரம் – 13, திருவள்ளுர் -7, செங்கல்பட்டு -5,  அரியலூர் – 18, கோவை -1, கடலூர் -2, மதுரை – 1, சேலம் -1,  கிருஷ்ணகிரி -1, பெரம்பலூர் -2, ராம்நாட் -2, தேனி-1, திருப்பூர் -2, விழுப்புரம் -2.
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் தமிழகஅரசு சரியான முடிவு எடுக்காத நிலையில், இன்று சென்னையில் கொரோனா பரவலுக்கு அதுவே காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகஅரசு மே 4ந்தேதி முதல்  பல்வேறு தளர்வுகளை அறிவித்து கடைகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இது மக்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.