சென்னை:

மிழகத்தில் இன்று முதல் பல சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை சூரப்பட்டு சுங்கச்சாவடி உள்பட 22 சுங்கச்சாவடிகளில், குறைந்த பட்சம் ரூ.5 முதல் அதிக பட்சமாக ரூ.20 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 42 சுங்கச்சாவடிகள் செயல்படுவதாக கூறப்படுறது. இதில் பல சுங்கச் சாவடிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்ந்துவிட்ட நிலையில், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் இன்று கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

சூரப்பட்டு, வானகரம், விழுப்புரம், பரனூர், சேலம் ஆத்தூர், கிருஷ்ணகிரி, திருத்தணி பட்டறை பெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், சென்ன சமுத்திரம், கோவை கன்னியூர், தூத்துக்குடி சாலைப்புதூர், வேலூர் பள்ளிகொண்டா, வாணியம்பாடி, நெல்லை எட்டூர் வட்டம், கப்பலூர், நாங்குனேரி, புதுக்கோட்டை, திருச்சி சிட்டம்பட்டி, மதுரை பூதக்குடி, சிவகங்கை லெம்பலாக்குடி, லட்சுமணப்பட்டி ஆகிய 22 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

52 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் ஒருமுறை செல்ல கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.55ல் இருந்து ரூ.60 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினிபஸ் ஆகியவற்றுக்கு ரூ.90ல் இருந்து ரூ.95 ஆகவும் உயர்ந்தப்பட்டுள்ளது.

லாரி, ஆம்னிபஸ்களுக்கு ரூ.190ல் இருந்து ரூ.195 ஆகவும் 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205ல் இருந்து ரூ.215 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.295ல் இருந்து ரூ.305 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.360ல் இருந்து ரூ.375 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்ட உயர்வு பொதுமக்களிடையே ஆட்சியாளர்கள் மீது மேலும் வெறுப்பை வளர்த்துள்ளது.