நாகை : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளது. இது தமிழக மீனவர்களியே மீண்டும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளத.  சென்று இருப்பது மீனவ கிராமங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த விஷயத்தில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து எல்லைதாண்டி மீன்பிடித்துவருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அதை தமிழக மீனவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், தமிழகஅரசு வற்புறுத்தலின் பேரில் இந்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது மேலும் 21 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.  நாகை மாவட்டம் அக்கறைப்பேட்டியைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேரும் வேதாரண்யத்தை சேர்ந்த பல மீனவர்களும் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி 2 படகுகளையும்,  21 பேரையும் சிறைப்பிடித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கையின்  பருத்தி துறை துறைமுகத்தில் உள்ள இலங்கை மீன்வள துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவுமை, அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.