Month: November 2016

தேர்தல் வெற்றி: மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே கருத்துப் போர்

சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக-சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் மக்கள் பிரதமர் மோடியின் நோட்டுத்தடை நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற செய்திருப்பதாக நம்புவது முட்டாள்தனம் என்று சிவசேனா கட்சி தனது “சாம்னா” பத்திரிக்கையின்…

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: டாப் 3-யில் கோலி; தப்பிய ஜோ ரூட்

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், கோலி நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட்டை முந்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோ ரூட் 2-வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்…

நக்ரோட்டா தாக்குதல்: சுரங்கப்பாதை மூலம் ஊடுருவிய பயங்கரவாதிகள்

காஷ்மீர், நக்ரோட்டா பகுதியில் இன்று காலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான் பகுதியிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து இந்தியாவிற்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா என எல்லை…

விழுப்புரம்: அரசு பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கர மோதல்! 5 பேர் பலி

விழுப்புரம், விழுப்புரம் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பஸ் டிரைவர், குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில்…

ராகுல்காந்தியின் ட்விட்டர் தளம் ஹேக் செய்யப்பட்டு அதில் ஆபாச செய்திகள் பரிமாற்றம்

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளம் சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு அதில் ஆபாச, அவதூறு செய்திகள் அவர் வெளியிடுவது போல பரப்பப் படுகிறது. அவரது ட்விட்டர் தளத்துடன் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். “லீஜன்” என்ற…

'நாடா புயல்': சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை!

சென்னை, வங்க கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், மீனவர்கள் யாருக்கும் கடலுக்குள்…

பெற்றோர் அனுமதித்தால் மட்டுமே மகன்கள் அவர்களுடன் வாழமுடியும்: உச்சநீதிமன்றம்

“பெற்றோர்கள் தங்கள் சொந்த உழைப்பால் சம்பாதித்த வீட்டில் அவர்கள் கருணையுடன் அனுமதித்தால் மட்டுமே அவர்களுடன் மகன்கள் தங்கியிருக்க முடியும். அவர்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி ஆகாதவராக இருந்தாலும் சரி. பெற்றோர் வெளியேறச்சொன்னால் உடனடியாக வெளியேற வேண்டும். அவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது” இப்படி…

சுதந்திர தினத்தை கொண்டாட கோவை-லண்டன் காரில் செல்லவிருக்கும் 4 பெண்கள்

கோவையில் இருந்து லண்டனுக்கு காரில் சென்று இந்தியாவின் சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாட நான்கு இந்திய பெண்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சாதனை பயணத்துக்கு எக்ஸ்பிடி 2470 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை திட்டமிட்டவர் மீனாட்சி அரவிந்த் இவர் இரு ஆண்டுகளுக்கு முன்னர் காரிலேயே…

மரபியல் அதிசயம்: ஆப்ரிக்காவில் தந்தமின்றி பிறக்கும் யானைகள்

யானைகள் தந்ததுக்காக தொடர்ந்து வேட்டையாடப்படுவதாலும், தந்தங்கள் பிடுங்கப்படுவதாலும் ஏற்பட்ட மரபணு மாற்றத்தால் ஆப்ரிக்காவில் தற்பொழுது பிறக்கும் யானைக்குட்டிகள் தந்தமின்றி பிறப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் 98% பெண் யானைகள் தந்தமின்றி வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

மந்திரவாதி பிடியில் நடிகை பாபிலோனா.? கதரும் பாட்டி

கவர்ச்சி நடிகை பாபிலோனாவை ஒரு மந்திரவாதி தன் வசப்படுத்தி வைத்துள்ளதாக அவரின் பாட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். செவ்வாய்க்கிழமையன்று பாபிலோனாவின் பாட்டி கிருஷ்ணகுமாரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது…