ராமநாதபுரம்:
லங்கை, குருநகர் பகுதியைச் சேர்ந்த 2 தமிழர்கள் அகதிகளாக ராமநாதபுரம் வருகை தந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து விட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை, குருநகர் பகுதியைச் சேர்ந்த 2 தமிழர்கள் அகதிகளாக ராமநாதபுரம் வருகை தந்துள்ளனர்.  பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து இதுவரை 49 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.