சென்னை: கரூர், திண்டுக்கல், ஈரோடு,மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  நவம்பர் 10, 11ந்தேதிகளில் அவரது சுற்றுப்பயணம் உள்ளது.

ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 10ந்தேதி ஈரோடு மாவட்டத்திலும், 11ந்தேதி கரூர் மற்றும் ஈரோட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது.

2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   3 மாவட்டங்களில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் முடிவு செய்துள்ளதாகவும், பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கு நிகழ்ச்சி மற்றும் கரூரில் 11-ம் தேதி நடைபெறும் 50,000 விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.